குத்தாலம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
குத்தாலம் நகர மதிமுகவினர் கட்சியின் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ப.த. ஆசைத்தம்பி, பேரூர் செயலாளர் ஆ. கருணாநிதி ஆகியோர் தலைமையில் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் க. பாரதிதாசனை திங்கள்கிழமை நேரில் சந்தித்து, நகர மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் குத்தாலம் பேரூராட்சி ஸ்ரீராம் நகரில் நடைபாதையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.