திருக்கடையூரில் காவல்துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் ஸ்டாலினை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி. இராசையன், ஏ.ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரியேல், மார்க்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.