நாகை மாவட்ட கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு இயக்குநராக பூம்புகார் பகுதியைச் சேர்ந்த எஸ். பாலு பதவியேற்றார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் பரிந்துரையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு இயக்குநராகப் பதவியேற்ற பாலு பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.