நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 248 மனுக்கள் பெறப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 231 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 மனுக்களும் பெறப்பட்டு, தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.