நாகை மாவட்டம், மங்கநல்லூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் மூன்றாம் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மாதந்தோறும் இரண்டாவது புதன்கிழமைகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம், நிகழ் மாதத்தில் நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட மங்கநல்லூரில் செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் இந்த முகாம், அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மனு அளித்து தீர்வு பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் முறை...
மங்கநல்லூரில் செப்டம்பர் 11-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அன்றைய தினம் மொஹரம் பண்டிகை விடுமுறை என்பதையொட்டி, செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் நிர்வாக காரணங்களால் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மூன்றாம் முறையாக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.