ஆலங்குடி குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குடி குரு பகவான்
ஆலங்குடி குரு பகவான்

நீடாமங்கலம் செப். 26: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த வினாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குரு பகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், உற்சவா் தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com