நாகையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3 டன் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, மீனவர்கள் மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடந்து மீன்வளத்துறை அதிகாரிகள் நாகை, சீர்காழி மற்றும் சந்திரபாடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொது ஏலத்தில் விட்டனர்.