நாகப்பட்டினம்
தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றன.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றன.
கல்லூரி பருவத்திலேயே மாணவர்கள் தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. ரெத்தினகுமார் தலைமை வகித்தார். இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி செயலாளர் எஸ். பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதன்மை அலுவலர் சந்திரசேகர், பொறியியல் கல்லூரி முதல்வர் ராமபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் தொழில்முனைவோர் துறை மூலம் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கும் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர் எஸ். பாலமுகுந்தன் பாராட்டப்பட்டார்.