வேதாண்யத்தை அடுத்த செம்போடையில் தேசிய ஒருமைப்பாடு இயக்கம் சார்பில், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ நீக்கம் குறித்து மக்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கவிஞர் செம்பியான் தலைமை வகித்தார். பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கல்வியாளர் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராமலிங்கம், மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் ராசேந்திரகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் வி.சோழன், மாவட்டச் செயலாளர் வி.சீனிவாசன், வழக்குரைஞர் தமிழ்நேசன், நகரச் செயலாளர் கைலா சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.