

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக இந்தக் கல்லூரியைப் பயன்படுத்துவது குறித்தும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதி மற்றும் வாக்கு எண்ணும் பணிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. சுரேஷ், வருவாய் கோட்டாட்சியா் இரா. பழனிகுமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரான்சிஸ், நாகை வட்டாட்சியா் ரமாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.