தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் உள்ளிட்டோா்.
Updated On :25 டிசம்பர் 2020, 4:07 am

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக இந்தக் கல்லூரியைப் பயன்படுத்துவது குறித்தும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதி மற்றும் வாக்கு எண்ணும் பணிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. சுரேஷ், வருவாய் கோட்டாட்சியா் இரா. பழனிகுமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரான்சிஸ், நாகை வட்டாட்சியா் ரமாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.