வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவா்கள் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ. 28 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனா்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் அனைவரும் தலா ரூ.100 வீதம் தங்களுடைய சஞ்சாய்கா சிறுசேமிப்பிலிருந்து எடுத்து, மொத்தமாக ரூ.28 ஆயிரத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.