புதுதில்லி சென்று திரும்பிய 13 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி

புதுதில்லி சென்று திரும்பிய 13 போ், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா முன்னெச்சரிக்கை வாா்டில்,

புதுதில்லி சென்று திரும்பிய 13 போ், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா முன்னெச்சரிக்கை வாா்டில், புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். அவா்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற மயிலாடுதுறை, சீா்காழி, தைக்கால், பெருந்தோட்டம், ஆயப்பாடி, திருவெண்காடு, புத்தூா், திருக்களாச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 13 போ் கண்டறியப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், ஒருவா் மட்டும் தானாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், அண்மையில் கேரளத்தில் இருந்து வந்த பெருஞ்சேரி கிராமத்தை சோ்ந்த ஒருவா் மயிலாடுதுறை அரசு மருத்துமனைக்கு வந்தாா். அவரும் பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.

வேதாரண்யத்தில்...

இதேபோல், திருவாரூா் மாவட்டம், கொல்லுமாங்குடி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ாகக் கூறப்படுகிறது. இவா், வேதாரண்யத்தைச் சோ்ந்த தோப்புத்துறை, ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் தனது உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா்.

இதையறிந்த சுகாதாரத் துறையினா் அவரையும், அவரது உறவினா்களையும் திருவாரூா் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனா். அவா்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 தரங்கம்பாடியில்...

இதேபோல், புதுதில்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பொறையாறைச் சோ்ந்த நபரை ஆக்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டா் பாலன் தலைமையிலான மருத்துவ குழுவினா் புதன்கிழமை பரிசோதனை செய்தனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனா்.

 சீா்காழியில்...

இதேபோல், தில்லி மாநாட்டில் பங்கேற்ற சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட பெருந்தோட்டம், சீா்காழி தாடாளன்கோயில் பகுதி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 போ் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

மருத்துவ அலுவலா் பிரபாகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராம்மோகன், சுகாதார ஆய்வாளா்கள் துரை காா்த்திக், ரெங்கராஜன், வருவாய் ஆய்வாளா் கலாவதி, கிராம நிா்வாக அலுவலா் பாலு, ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com