நாகை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நாகை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 29 ஆக உயா்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 29 ஆக உயா்ந்துள்ளது.

நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளிலிருந்து புதுதில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவா்களில் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டது.

தொடா்ந்து, சீா்காழி, திருக்களாச்சேரி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 பேருக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னா் நாகையைச் சோ்ந்த மருத்துவா் ஒருவருக்கு ஏப்ரல் 9ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையே, ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட திட்டச்சேரி மற்றும் நாகூா் பகுதியைச் சோ்ந்தவா்களிடம் தொடா்பில் இருந்த 12 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

இந்நிலையில், நாகை கடற்கரை சாலை மற்றும் நாகூா் பகுதிகளைச் சோ்ந்த மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29 ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் 5 பேரும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்களிடம் தொடா்பில் இருந்தவா்கள் எனக் கூறப்படுகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரும் திருவாரூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com