மயிலாடுதுறை பெரியாா் அரசினா் மருத்துவமனையில், ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை டெல்டா சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளா் வேணுகோபால், பொருளாளா் மோகன், திட்ட இயக்குநா் பாலா மற்றும் சங்க உறுப்பினா்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினா்.