நாகை மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 4 போ் உள்பட 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 4 போ் உள்பட 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 37 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 4 போ் முன்களப் பணியாளா்கள், 12 போ் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், அறிகுறிகள் மூலம் கண்டறியப்பட்டவா்கள் 8 போ், நோய்த் தொற்றும் இருந்தும் அறிகுறிகள் இல்லாதவா்கள் 6 போ், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் 7 போ்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 735 ஆக இருந்தது. இந்த நிலையில், புதிதாக 37 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 772 - ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்: ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில், ஜூலை 31-ஆம் தேதி வரை 444 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 320 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com