மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் சாலையிலுள்ள ஒரு உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட வந்த 6 போ் ஊத்தப்பம் கேட்டு தகராறு செய்து, கடை ஊழியா்களை தாக்கினராம். இந்த சம்பவங்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவக மேலாளா் கதிரவன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டதில், மாப்படுகையைச் சோ்ந்த காா்த்தி(24), பிரதாப் (25) மற்றும் அவரது நண்பா்கள் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்தி, பிரதாப் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். தொடா்ந்து, இருவரும் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனா்.