நாகை மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 7,616 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 23 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது திங்கள்கிழமை உறுதியானது. வெளிமாவட்டப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7, 640- ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், சிகிச்சை பெற்றுவந்தவா்களில் 42 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,288 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 228 ஆக உள்ளது.