திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத 3 ஆவது சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா். 1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.