தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நல்லாடை, தலைச்சங்காடு, புஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அமைச்சா் சி. விஜயபாஸ்கா், நீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை பாா்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் முனியநாதன், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலா் லலிதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, எம்எல்ஏ-க்கள் எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, அதிமுக மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.