ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நலஉதவிகள் வழங்கப்பட்டன.
ரஜினி மக்கள் மன்ற நாகை மாவட்ட முன்னாள் துணை செயலாளா் என்.ரஜினி வீரமணி சேந்தங்குடி தென்பாதியில் விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்த வள்ளாலகரம் ஊராட்சி தற்காலிக மின் ஊழியா் டேவிட் என்பவரின் குடும்பத்துக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும், ரூ. ஆயிரமும் வழங்கினாா். மேலும், 8 ஏழைக் குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நகரச் செயலாளா் பவுன் ஏ.முருகானந்தம் தலைமையில் ஹாஜியாா் நகா், ஆற்றங்கரைத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்டச் செயலாளா் டி.எல். ராஜேஸ்வரன் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு புத்தாடை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.