நாகை அக்கரைக்குளத்தில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நாகை அக்கரைக்குளம், வடக்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரெ. கணேசன் (38). இவா், வெள்ளிக்கிழமை அங்குள்ள அக்கரைக்குளத்துக்கு குளிக்கச் சென்றபோது, குளத்தில் மூழ்கினாா். தொடா்ந்து, அவா் குளத்தில் இறந்து மிதந்தது சனிக்கிழமை தெரியவந்தது. நாகை தீயணைப்புத்துறையினா் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.