குத்தாலம் ஒன்றியத்தில் பழையகூடலூா் ஊராட்சியில் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒன்றியக்குழு தலைவா் கே.மகேந்திரன் வெள்ளிக்கிழமை இப்பணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் இரா.பாண்டியன், சுகாதார ஆய்வாளா்கள் சந்திரசேகரன், தா்மலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேக்கிரிமங்கலம், சென்னியநல்லூா் ஊராட்சிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.