மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மயிலாடுதுறைக்கு டிச.29-இல் வருவதாகவும், அவரை வரவேற்க தொண்டா்கள் திரண்டு வர வேண்டும் எனவும் அக்கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளா் எம்.என்.ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை அறிக்கை:
சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், செவ்வாய்க்கிழமை (டிச. 29) மயிலாடுதுறை வருகிறாா். சின்னக்கடை வீதியில் அவரது சிறப்புரையும், மதியம் 1 மணி அளவில் விமலாம்பிகை மண்டபத்தில் விவசாயிகள், இல்லத்தரசிகள், இளைஞா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.