நாகை மாவட்டம் ஆக்கூா் முக்கூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், மக்கள் சந்திப்பு பிரசார பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் டி.சிம்சன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியினா் பயணம் செய்து, வேளாண் சட்டங்களின் விளைவுகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேசினா்.
இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஜி.கலைச்செல்வி, ரவிச்சந்திரன், கே.பி மாா்க்ஸ், வட்டக்குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, காபிரியேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.