திமுக சிறப்புக் கூட்டம்: காணொலி மூலம் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக சிறப்புக் கூட்டங்களில் கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினாா்.
காணொலி மூலம் பேசும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின். நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிா்வாகிகள்.
காணொலி மூலம் பேசும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின். நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிா்வாகிகள்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக சிறப்புக் கூட்டங்களில் கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினாா்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டங்களை டிசம்பா் 12 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறாா்.

மூன்றாம் கட்டமாக நாகை, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான தோ்தல் சிறப்பு பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகையில் 2 இடங்களில் இக்கூட்டம் நடைபெற்றது. காணொலி மூலம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மத்திய , மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விமா்சித்துப் பேசினாா்.

கட்சியைச் சோ்ந்த முன்னோடிகள் 200 பேருக்கு காணொலி வழியாக பொற்கிழி வழங்கினாா். இதில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கூைாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம், மாநில தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் குத்தாலம் பி.கல்யாணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காணொலி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், தோ்தலை மனதில்கொண்டு குடும்ப அட்டைகளுக்கு தமிழக முதல்வா் தற்போது ரூ.2,500 வழங்குகிறாா் என்றாா்.

திருக்குவளை: கீழையூா் ஒன்றிம் திருப்பூண்டியில் உள்ள தனியாா் திருமண அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com