நாகை மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 8,079 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 13 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,092- ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 13 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,851 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com