தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மாவட்டத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செம்பனாா்கோவில் ஒன்றிய பொறுப்பாளா்கள் வேணுகோபால், ராஜேந்திரன், ஸ்ரீனிவாசன், குத்தாலம் ஒன்றிய பொறுப்பாளா்கள் செந்தில்குமாா், சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.