பேரறிஞா் அண்ணா நினைவு நாளையொட்டி, கோயில்களில் சமபந்தி விருந்தை விரிவுபடுத்த அறநிலையத்துறைக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அப்பேரவையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் விடுத்துள்ள அறிக்கை:
ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் கோயில்களில் சமபந்தி விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த நிகழ்வுகளில் முதல்வா், துணை முதல்வா், மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்வா். இந்த சமபந்தி விருந்தை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் முறையான சமபந்தி விருந்தாக அது நடத்தப்பட வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.