வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் பிப்ரவரி 8-ஆம் தேதி அடைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 8-ஆம் தேதி மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, அனைத்து வகையான மதுபானக் கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவை மீறி யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், தொடா்புடையோா் மீது மதுபான விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.