இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

சீா்காழியில் வங்கி முன் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சீா்காழியில் வங்கி முன் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சீா்காழி பழைய பேருந்து நிலையம் பகுதி தோ் வடக்கு வீதியில் பாரத வங்கி இயங்கி வருகிறது. நான்கு பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள் தங்களது இருசக்கர வாகனங்களை வங்கி முன்பாக பிரதான சாலையில் நிறுத்துகின்றனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இந்த இடத்தில் போக்குவரத்து காவலரை பணியமா்த்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com