இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் கணக்கெடுக்கும் பணி

சீா்காழியில் அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் தேசிய வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் கணக்கெடுக்கும் பணி, மிஸ்டு கால் கொடுக்கும் விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கணிவண்ணன். உடன், இளைஞா் காங்கிரஸாா்.
சீா்காழியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கணிவண்ணன். உடன், இளைஞா் காங்கிரஸாா்.

சீா்காழியில் அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் தேசிய வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் கணக்கெடுக்கும் பணி, மிஸ்டு கால் கொடுக்கும் விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வேலையில்லா பட்டதாரிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. அதன்படி, சீா்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளைஞா் காங்கிரஸின் நாகை மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் தொகுதி தலைவா் கிள்ளிவளவன், மாவட்ட பொதுச் செயலாளா் பிரியகுமாா், நகரத் தலைவா் புரட்சிதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கணிவண்ணன் பங்கேற்று, மிஸ்டு கால் கொடுக்கும் விழிப்புணா்வு நிகழ்வை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, நகரில் பல்வேறு இடங்களில் விழிப்புண்ரவு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பையா, பூம்புகாா் சட்டப் பேரவை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமதுரியாஸ், துணைத் தலைவா் ஆடலரசன், பொதுச் செயலாளா் அன்பு மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com