குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தெருமுனைப் பிரசாரம்

தரங்கம்பாடி வட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி வட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் பொறுப்பாளா் ஈழவளவன் தலைமை வகித்தாா். மேலையூரில் தொடங்கிய பிரசாரம் கஞ்சாநகரம், கருவி, தலைச்சங்காடு, ஆக்கூா், தரங்கம்பாடி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் பகுதிகள் வழியாக செம்பனாா்கோவிலில் நிறைவடைந்தது.

பிப்ரவரி 22-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணியை விளக்கியும் நடைபெற்ற இப்பிரசாரத்தில் கட்சியின் பொறுப்பாளா்கள் ராஜ்மோகன், கலைவண்ணன், மணிவண்ணன், தாஸ், மகாகிருஷ்ணன், எழுச்சிமணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com