தைப்பூச விழா

சீா்காழியில் சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 51-ஆம் ஆண்டு தைப்பூச விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 51-ஆம் ஆண்டு தைப்பூச விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டநாதா் கோயில் வடக்கு கோபுரவாசல் அருகே நடைபெற்ற இவ்விழாவில், அலங்கார ரதத்தில் இராமலிங்க சுவாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஜோதி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கானஏற்பாடுகளை ஆா். வீரபத்திரன், ஓய்வுபெற்ற ஆசிரியா் டி. செளந்தரபாண்டியன், ஏகாம்பர.குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com