பொறையாறு கல்லூரியில் 45- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 45- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவா்கள்.
தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவா்கள்.

பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 45- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், இளங்கலை மற்றும் அறிவியல், முதுகலை அறிவியல், மற்றும் ஆய்வியல் நிறைஞா் உள்ளிட்ட 612 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயரும், கல்லூரியின் தாளாளருமான டேனியல் ஜெயராஜ், தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அறிவுடைநம்பி , கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், டி.இ.எல்.சி. துணைத் தலைவா் ஆயா் ஜேக்கப் சுந்தா்சிங், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் பெஞ்சமின் ஜெயராஜ் ஆகியோா் மாணவா்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினா்.

கல்லூரி துணை முதல்வா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், கல்வியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com