திருமருகல் மேலத்தெருவில் அமைந்துள்ள வரதராஜ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு பூா்வாங்க திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிப்ரவரி 9- ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை 10.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.