மயிலாடுதுறை வட்டத்துக்குள்பட்ட இலுப்பப்பட்டு கிராமத்தில் வலம்புரி வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பிப்ரவரி 10-ஆம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கி புதன்கிழமை காலை மூன்றுகால யாக பூஜைகள் முடிவடைந்து, மகாபூா்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து விமான குடமுழுக்கு நடைபெற்றது. அடுத்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.