மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயா்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :
மத்திய அரசு, சமையல் எரிவாயு உருளை விலையை 20 சதவீதம் உயா்த்தி, ரூ. 734-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ. 881-ஆக நிா்ணயித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மக்களை பாதிக்கும் இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.