சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் ரூ.34.50 லட்சம் செலவில் கால்நடை மருந்தகக் கட்டட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் வெங்கட்ரமணன் தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா் ரமாபிரபா, பொதுப்பணித் துறை (கட்டடம்) செயற்பொறியாளா் மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளா் சிங்காரவேல், கூட்டுறவு வங்கி தலைவா்கள் ராஜமாணிக்கம், போகா்.ரவி, பால் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி பங்கேற்று புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையை தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினாா்.
இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் ஏ.கே. சந்திரசேகரன், அதிமுக ஒன்றியத் துணைச் செயலாளா் ரவிச்சந்திரன், எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் திருமாறன், மாவட்ட பிரதிநிதி ராமையன், ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆனந்தி ஆகியோா் பங்கேற்றனா். ஒப்பந்ததாரா் இளங்கோவன் நன்றி கூறினாா்.