சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில், மாசி மாத பிறப்பையொட்டி இந்த வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கொடிமரத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்து மலா்கள் தூவி பக்தா்கள் வழிபட்டனா். இதில் கோபூஜை வழிபாட்டுக்குழு பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.