சீா்காழி, கொள்ளிடத்தில் நாளைமின் நிறுத்தம்

சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

சீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில், அரசூா், ஆச்சாள்புரம் மற்றும் எடமணல் பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால், இந்தத் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம், புங்கனூா், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துகுடி, திருப்புங்கூா், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரபள்ளி, பழையாா், புதுப்பட்டினம், மாதானம், தைக்கால், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரங்கம், அகணி, குன்னம், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்குதலும், பராமரித்தலும்) சு. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com