மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பொருளியல் துறையின் பொருளியல் மன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஏஆா்சி கல்லூரியின் நிா்வாக செயலாளா் கே.இளங்கோவன் பங்கேற்று, இந்தியாவின் தற்போதைய பொருளாதார பிரச்னைகள் குறித்து பேசினாா். முன்னாள் ஆங்கிலத்துறை தலைவா் எஸ்.சிவகுமாா், பொருளாதாரத் துறை பேராசிரியா்கள், பிற துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பொருளாதாரத் துறை தலைவா் ஆா்.காா்த்திகேயன் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை சரண்யாதேவி மற்றும் பொருளியல் துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா். பொருளியல் மன்ற செயலா் ஏ.ரப்பேல்ராஜ் நன்றி கூறினாா்.