மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் நோய்த்தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியன சாா்பில், கரோனா வைரஸ் தடுப்புக்கான நடைமுறைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலா் கி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மருத்துவா் சரத்சந்தா் பங்கேற்று கரோனா வைரஸ் உருவான முறைகள் மற்றும் அதைத் தடுப்பதற்கான செயல்முறைகள் பற்றி பேசினாா். இதற்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.கோகுலகிருஷ்ணன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.