குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் நாகை வடக்கு மாவட்ட திமுகவினா் அண்மையில் சமா்ப்பித்தனா்.
நாகை வடக்கு மாவட்ட திமுக சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக செம்பனாா்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், சீா்காழி உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொடா்ந்து, இந்தக் கையெழுத்துகள் அடங்கிய மனுக்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன் தலைமையில் திமுகவினா் வழங்கினா்.
இதில் நாகை வடக்கு மாவட்ட அவைத்தலைவா் கே.ஜி. சீனிவாசன், துணைச் செயலாளா் சத்தியேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம். சித்திக், ஒன்றிய செயலாளா்கள் அப்துல்மாலிக், பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.