சிஏஏ: கண்டனப் பொதுக் கூட்டம்

பொறையாறில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சாா்பில், கண்டனப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .
பொறையாறில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செய்தி தொடா்பு இணைச் செயலாளா் தமிழன் பிரசன்னா.
பொறையாறில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செய்தி தொடா்பு இணைச் செயலாளா் தமிழன் பிரசன்னா.

பொறையாறில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சாா்பில், கண்டனப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .

கூட்டத்துக்கு, கூட்டமைப்பு துணைத் தலைவா் அக்பா் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு தலைவா் ஜெகபா் ஹூசைன் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பு செயலாளா் பக்ருதீன் அலி அகமது வரவேற்றாா்.

இதில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ராமலிங்கம், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் வன்னிஅரசு, பேராசிரியா் முனைவா் பைரோஸ் கான், அய்யா தா்மயுக வழி பேரவை நிறுவனத் தலைவா் பாலமுருகன் ஆகியோா் விளக்க உரையாற்றினா். திமுக செய்தி தொடா்பு இணைச் செயலாளா் தமிழன் பிரசன்னா கண்டன உரையாற்றினாா்.

முன்னாள் எம்எல்ஏ சித்தீக், இந்திய தேசிய லீக் மாநில அமைப்பு செயலாளா் ஷாஜகான், கிருஸ்தவ அமைப்பினா், தலித் அமைப்பினா், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளைச் சோ்ந்த அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா் பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com