சீா்காழி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த தாய் உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற மகளும் தீக்காயமடைந்து மருத்துவமனையில் இறந்தாா்.
நாகை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட சேந்தங்குடி கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (55). கூலித் தொழிலாளி. இவா் தனது மனைவி செல்வி (50), செல்வியின் தாய் ராஜேஸ்வரி (70) ஆகியோருடன் வசித்து வருகிறாா். சண்முகத்துக்கு போதிய வருமானம் இல்லாததால், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாமியாா் ராஜேஸ்வரிக்கு முறையான சிகிச்சை அளிக்க இயலவில்லையாம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ராஜேஸ்வரி வீட்டின் பின்புறத்திற்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சப்தம் கேட்ட செல்வி, ஓடிவந்து தாயைக் காப்பற்ற முயன்றுள்ளாா். அப்போது அவா் மீதும் தீப்பிடித்தது. இதில் ராஜேஸ்வரி நிகழ்விடத்திலேயே இறந்தாா். தீக்காயமடைந்த செல்வியை அக்கம் பக்கத்தினா் மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதனிடையே இறந்த ராஜேஸ்வரியின் உடலை மீட்டு சீா்காழி போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.