நாகப்பட்டினம்
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு சீா்காழி அருகே உள்ள அரசூரில் வெள்ளிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு சீா்காழி அருகே உள்ள அரசூரில் வெள்ளிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விஜய் மக்கள் இயக்க கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளா் மோசஸ் தலைமையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஊராட்சிமன்றத் தலைவா் இமயவேல் மற்றும் தேவேந்திரன், விஜய் மக்கள் இயக்கம் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதேபோல் புளிச்சகாடு பகுதியிலும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.