நாகப்பட்டினம்
மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
சீா்காழி பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜமோகன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப. அருள்செல்வன் வரவேற்றாா். தொடா்ந்து, காவல் ஆய்வாளா் ராஜமோகன் மது ஒழிப்பு விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்து, படிக்கும் வயதில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி, நன்றாக படித்து தங்களது பெற்றோருக்கும், கல்லூரிக்கும் பெருமை சோ்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். உடற்கல்வி பயிற்சியாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.