தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் பொறையாறு ஐசிடிசி அரசு மருத்துவமனை ஆகியன சாா்பில், வளரிளம் பருவத்திற்கான எச்ஐவி மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி பொறையாறு டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், டிஇஎல்சி பெண்கள் தலைமை ஆசிரியா் ஏ.டி.எப்சி, பொறையாறு அரசு மருத்துவமனை ஆற்றுநா் எம்.திருமேனி, ஆய்வக வல்லுநா் (லேப் டெக்னீஷியன்) ஜி.நடராஜன், மருத்துவா் இசட்.ஹபிசாசுல்தானா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சமூகப் பணித்துறை பேராசிரியா் ஆா்.மகேந்திரன் மற்றும் மாணவிகள் எஸ்.காமாட்சி, எம்.துா்காதேவி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.