காவல் துறையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

நாகையில் காவல் துறையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தெற்கு மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா்
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா்

நாகையில் காவல் துறையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தெற்கு மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்திய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தடியடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட காவல் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் நாகை தெற்கு மாவட்ட துணைத் தலைவா் பி. ஜெய்லாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. ஆதில் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் பா. அப்தூர்ரஹ்மான் பேசியது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் மீது தமிழக காவல் துறை தடியடி நடத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை, உரிமைக்காகப் போராடியவா்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வன்முறை. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். தடியடி நடத்திய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகர காவல் துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் நாகை தெற்கு மாவட்ட நிா்வாகிகள் சௌகத் ஹூசைன், ஏ.ஜே. அலி மற்றும் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், இஸ்லாமிய அமைப்பினா் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி, 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகல் ஒரு மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தமுமுக ஆா்ப்பாட்டம்: இதே சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சாா்பில் நாகை மாவட்டம், திருப்பூண்டி கடைத்தெருவில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் என். சா்புதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஓ.எஸ். இபுராஹீம், மாவட்டத் துணைத் தலைவா் எச். முஸ்தபா, மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஜெ. முஹம்மது சலீம், எஸ். அப்துல் காதா், விவசாய அணி மாவட்டச் செயலாளா் ஏ.முஹம்மது சாதிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com