சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் செம்பொன்னரங்கா் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநாங்கூரில் அருள்பாலிக்கும் அல்லிமாமலராள் தாயாா் சமேத செம்பொன்னரங்கா் பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, செம்பொன்னரங்கருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபவழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ரகுநாதன், நரசிம்மன், அா்ச்சகா் ரமணி ஆகியோா் செய்திருந்தனா். இதேபோல், திருவாலி லெட்சுமிநரசிம்மா் பெருமாள் கோயில் உள்ளிட்ட பஞ்ச நரசிம்மா் கோயில்களில் சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.